2012/06/25


உலக அழிவு உண்மைதான்! ஆனால் அது எப்போது?


அடுத்த 2012ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று சில இணையதளங்கள் மூலமாகவும், மின் அஞ்சல் வழியாகவும் இன்ன பிற ஊடகங்கள் வாயிலாகவும் அண்மைக் காலமாக செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. திரைப்படங்கள் கூட வெளிவந்துள்ளன.

அமெரிக்க துணைக் கண்டத்தில் வாழ்ந்து வந்த 'மாயன்' என்கிற சமூகத்தாரின் பஞ்சாங்கம் 2012ம் ஆண்டுடன் முடிவடைகிறது என்பதும், 2012ல் உலகம் அழிந்து விடும் என்பதை அவர்கள் அறிந்து இருந்ததனால்தான் அதற்கு மேல் அந்த பஞ்சாங்கம் தொடரவில்லை என்பதுமே இக்கூற்றினை பரப்புவோரின் வாதத்திற்கு ஆதாரமாகும்.

இன்னொரு சூரியன்

ஆகாயக் கோள்கள், நட்சத்திரங்கள் என்பன போன்றவற்றின் நிலைகளில் நேர்ந்திடும் மாற்றங்களையும் கூட இந்த வாதத்திற்கு சான்றாக அவர்கள் எடுத்தாளுகின்றனர். அவற்றுள் புதிதாக வந்த ஒரு கூற்றுதான் இன்னொரு சூரியன் தோன்றப் போகிறது என்பதும்!
வானியலை பற்றியும், நட்சத்திரங்களின் தோற்றம் - பரிணாமம் போன்றவை பற்றியும் எதுவுமே தெரியாது இருந்த காலத்தில் சூரியனையோ, சந்திரனையோ போல ஒளிர்கின்ற புதிய பொருள் ஒன்று வானத்தில் திடீரென தோன்றினால் எந்த ஒரு மனிதனும் நிச்சயமாக பயந்திடத்தானே செய்திருப்பான்?

இன்னுங்கூட மிகுதியானவர்களுக்கு வானியல் பற்றி போதிய அறிவோ, விழிப்புணர்வோ இல்லாத நிலையில் - அடுத்த வருடம் நாம் இரு சூரியன்களை காண்போம் என்று ஓர் அறிவிப்பை ஏதாவது ஒரு விஞ்ஞானி வெளியிட்டால் வரவிருக்கும் ஓர் பேராபத்தின் முன்னறிவிப்பாகவே இருக்கக் கூடும் அது என்று பலரும் எண்ணத்தானே செய்வர்! அதற்காக அந்த பாமரர்களை குற்றஞ்சாட்ட முடியுமா?

இணைய தளங்களில்...

கடந்த ஜனவரி மாத இறுதியில்தான் அப்படி ஒரு செய்தி இணையதள வெளியீடுகள் சிலவற்றில் பிரசுரமாகி இருக்கின்றன. (நம் நாட்டு இணையதளங்களில் இச்செய்தி இடம்பெறவில்லை என்பது சற்று ஆறுதலான விசயம்) இதனைத் தொடர்ந்து உடனடியாக வேறு சில விஞ்ஞானிகள் அதனை மறுத்துக் கூறியபோதும் அந்த மாற்றுக் கருத்துக்கு - முந்தைய செய்திக்கு கிடைத்த முக்கியத்துவம் கிடைத்திடவில்லை. எனவே அந்த தகவலின் அடிப்படை என்ன? உலகம் அழியத்தான் போகிறதா? என்பன பற்றி நாம் இங்கே சற்று ஆராய்வோம்.

நீர் சுள்ளான்


ஹைட்ரஜன் என்கிற நீரிய வாயு ஹீலியமாக மாறிடும் செயல்பாட்டின் மூலம்தான் நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன. நட்சத்திர காம்பில்தான் இந்த செயலாக்கம் நடைபெறுகிறது. இவ்வாறு நடைபெறும்போது ஹைட்ரஜனின் அளவு குறையக் கூடிய தருணத்தில் அதனால் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாமல் ஆகிவிடுகிறது. உட்புறத்தில் இருந்து கொண்டிருக்கும் வெப்பம் தணிந்து விட்டால் நட்சத்திரம் தனது ஈர்ப்பு சக்தியால் தானாகவே சுருங்கிப் போய் விடும். இவ்வாறு சுருங்கி விடும் நடைமுறையே மீண்டும் வெப்பத்தை உருவாக்கி விடும். அந்த வெப்பத்தால் ஒளிர்கின்ற நட்சத்திரம்தான் "நீர் சுள்ளான்" என்ற பெயரில் அறியப்படுகிறது. கடைசியில் வெப்பத்தை தொடர்ந்து தாங்கிட இயலாத நிலை நேரும் போது - ஒளியை உற்பத்தி செய்திட இயலாமல் ஆகி, நம் பார்வையை விட்டு அது மறைந்து விடுகிறது.
நாம் இன்று காண்கிற நமது சூரியனுக்கும் எதிர்காலத்தில் இப்படி ஒரு முடிவே நேர்ந்திடக் கூடும். இந்த அறிவியல் விளக்கம் பாமரர்களும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வகையில் தான் கூறப்பட்டுள்ளது. இந்த சூரியனும், நட்சத்திரங்களும் கடைசி காலத்தில் செக்க சிவந்த பிரம்மாண்டங்களாக ஆகி அதன் பின்னர்தான் அவை 'நீர் சுள்ளான்'களாக ஆகிவிடும்.

சூப்பர் நோவா

ஆனால் சூரியனைவிட ஒன்றரை மடங்கிற்கு மேல் பெரிய அளவிலான கோள் வடிவ நட்சத்திரங்களின் விதி வேறுபட்டதாகும். அவற்றின் முடிவு அதி பயங்கர வெடிப்பின் மூலம் நியூட்ரான் நட்சத்திரமாகவோ, இருட்டுப் பள்ளமாகவோ அவை ஆகிவிடும். அத்தகையதோர் வெடிப்பின் வாயிலாக வெளிப்படும் எரிசக்தி, சூரியனுக்கு இணையானதோர் நட்சத்திரம் அதன் ஆயுட்காலம் முழுமைக்கும் வீசுகின்ற அளவிற்கு இருக்கும். ஒரு நட்சத்திர சமூகத்தை விட அதிகமான ஒளியுடன் அப்போது அது காட்சி தரும். ஒரு நட்சத்திர சமூகத்தில் ஏறத்தாழ பத்தாயிரம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியானால் இத்தகையதோர் மகா வெடிப்பின் தீவிரம் எத்தகையதாக இருக்கும் என்பதை சற்று எண்ணிப் பாருங்கள். இத்தகைய வெடிப்புகள் 'சூப்பர் நோவா' என்ற பெயரில் அறியப்படுகின்றன.

திருவாதிரை நட்சத்திரம்

திருவாதிரை என்கிற செக்கச் சிவந்ததோர் வண்ணம் பெரிய நட்சத்திரமாகும். அதன் கோள் வடிவம் சூரியனை விட 20 மடங்கு பெரியதாகவும், அதன் விட்டம் பல நூறு மடங்கு பெரியதாகவும் இருக்கும். சூரியன் இருக்கும் இடத்தில் அது இருக்குமானால் செவ்வாய், புதன், சுக்கிரன் மற்றும் பூமி ஆகிய கோள்களும் விரவிக் கிடக்கின்ற இதர பல கிரகங்கள் யாவும் அதனுள் ஆழ்ந்து - அமிழ்ந்து போயிருக்கும்! அந்த அளவுக்கு பிரம்மாண்டமானதாகும் திருவாதிரை என்கிற நட்சத்திரம்!

இந்த நட்சத்திரம் அடுத்த ஆண்டு ஓர் சூப்பர் நோவாவாக ஆகி வெடித்து சிதறும் என்றும், அப்போது அதன் ஒளி சூரியனின் ஒளிக்கு ஒப்பானதாக இருக்கும் என்றும் - ஆஸ்திரேலியாவில் உள்ள தெற்கு குயின்ஸ் பல்கலைக் கழகத்தின் மூத்த விரிவுரையாளர் பிராண்ட் கார்ட்டர் அறிவித்தார்.
இது சரியல்ல என்றும், திருவாதிரை நட்சத்திரம் எப்போது சூப்பர் நோவாவாக ஆகும் என்பதை கனித்து முன்னறிவிப்பு செய்ய எவராலும் முடியாது என்றும் வேறு பல அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 640 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் திருவாதிரை சூப்பர் நோவாவாக ஆனாலும் கூட அது ஏறத்தாழ சந்திர ஒளியின் அளவுதான் பூமியில் தென்படும் என்றும் சுட்டிக்காட்டினர் அந்த அறிவியலாளர்கள். ஆயினும், இம்மாற்று கருத்துக்களுக்கு எந்த ஒரு இணையதளமும் உரிய முக்கியத்துவத்தை வழங்கிடவில்லை.

நாம் இன்று கற்றறிந்துள்ளவற்றின் அடிப்படையில் திருவாதிரையை போன்றதோர் நட்சத்திரம் நிச்சயமாக சூப்பர் நோவாவாக ஆகி விடும் என்பது உண்மையே! ஆனால் அது எப்போது நிகழும் என்பதை கணித்துச் சொல்லும் அளவிற்கு அறிவியல் வளர்ச்சியை நாம் இன்னும் எட்டவில்லை. என்றாவது ஒருநாள் அதற்கான அறிவாற்றலை மனிதன் அடையக் கூடும். அதன் கால அளவைக்கூட இன்று நம்மால் கணக்கிட்டு கூறமுடியாது.
பூமி சாம்பலாகி விடும்
நாளை நடப்பவைகளில் சிலவற்றை நிச்சயமாக நாம் அறிவோம். எடுத்துக்காட்டாக மரணத்தைக் கூறலாம். மரணம் சர்வ நிச்சயமான ஒன்று! ஆனால் அது எப்போது? எங்கே? எப்படி நேரும் என்பதை எவறாலும் கூறிவிட இயலாது அல்லவா. அதுபோலத் தான் திருவாதிரை வெடித்துச் சிதறும் என்பது திண்ணம். ஆனால் அது நிகழும் நாள் எந்நாள் என்பது எவருக்கும் தெரியாது.
சூரியன் அதன் முடிவை நெருங்கும்போது செக்கச் சிவந்ததோர் பிரம்மாண்டமாக ஆகிவிடும். அப்போது அது செவ்வாயின் சுற்றுவட்டப் பாதைவரை விரிவடைந்து பெரிதாகி விடும். அதனிடையே பூமி எரிந்து சாம்பலாகி விடும். அத்துடன் ஆவியாகி சூரியனுடன் இணைந்து விடும். அதுவரை பூமியில் எஞ்சியிருக்கும் உயிரினங்கள் யாவும் அத்துடன் ஒட்டுமொத்தமாக அழிந்து விடும். மனித இனம் அதுவரை பூமியில் நீடித்து இருக்குமா என்பதை யாராலும் கூற முடியாது.
கட்டுப்பாடற்ற புவி வெப்பத்தின் மூலமாகவோ, சாம்ராஜ்ஜியங்களை கட்டமைப்பதற்கான பேராசையின் விளைவாக ஏற்படக் கூடிய போர்களின் மூலமாகவோ ஒட்டுமொத்த உயிரின வாழ்வு மண்டலத்தையும் மனிதர்களே அழித்து விடாமல் இருந்தால் ஒருவேளை இப்புவியில் மனித இனமும் எஞ்சியிருக்கக் கூடும். ஆயினும், நாம் அறிந்துள்ளதோ, அறியாததோ ஆன காரியங்களின் மூலம் இந்த பூவுலகின் ஆயுள் ஒருநாள் முற்றுப் பெறத்தான் போகிறது.

அழிவு நிச்சயம்

உதாரணமாக விண்வெளியில் தவழ்ந்து கொண்டிருப்பவற்றுள் ஏதேனும் ஒரு பெரும் பொருள் நிலை குலைந்து வேகமாக வந்து பூமியில் மோதினால் இங்கு வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக மடிந்து விட அதுவே போதுமானதாகும். அவ்வாறு நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் மிக மிக குறைவு தான் என்று விஞ்ஞானிகள் கூறினாலும் - அப்படி எதுவும் நிகழாது என்று திட்டவட்டமாக கூறிட எவராலும் இயலாது.
சூரியனிலிருந்து வீசுகின்ற ஒளியின் அளவு ஏதேனும் காரணத்தால் சற்றே கூடினாலும் இந்த பூமியில் உயிர் வாழ முடியாத நிலை நேர்ந்திடும். இதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவே என்று அறிவியலாளர்கள் கூறுவர். என்றாலும், நாம் இன்று காண்கிற இந்த பிரபஞ்சம் என்றாவது ஒரு நாள் அழிந்து விடும் என்பதும் சர்வ நிச்சயமாகும்.
ஆயினும் உடனடியாக இந்த உலகம் அழிந்து விடப்போவதில்லை என்பதும் அதுபோலவே நிச்சயமானதேயாகும். அப்படி நிகழ்வதற்கேற்ற எந்த ஒரு சாத்தியக் கூறினையும் தற்போது நம்மால் காண முடியவில்லை. இதே உலகம் அழியப் போகிறது என்று கூறுவோர் அதற்கு ஆதாரமாக சுட்டிக்காட்டும் காரணிகளை ஆழ்ந்து ஆராய்ந்தால் அவை அடிப்படையற்றவை என்பது புலனாகும். இத்தகைய வதந்திகள் இதற்கு முன்னரும் பலமுறை பரவியுள்ளன.

அறியாமை

உலகம் அழியப் போகிறது என்று ஏறத்தாழ கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பலர் கூறினர். அதாவது 2000ம் ஆண்டில் ஏசு கிறிஸ்து திரும்பவும் உலகில் வருவார் என்றும், அத்துடன் உலகம் அழிந்து போய் விடும் என்றும் ஒரு சாரார் கூறினர்.
2000ம் ஆண்டுடன் பெரும் பிரளயங்களோ, வேறு வகையான மாபெரும் இயற்கை சீற்றங்களோ நேர்ந்திடும். அதன் மூலம் உலகம் அழிந்திடும் என்று அடுத்து ஒரு சாரார் அறிவித்தனர்.
இப்படியெல்லாம் பரவிய பற்பல வதந்திகளால் தாக்குண்டு, உலகம் அழிவதற்கு முன்பாகவே தற்கொலை செய்து தங்களை மாய்த்துக் கொண்டவர்கள் பற்றிய செய்திகள் பலவும் அப்போதே வெளிவந்தன. இவர்களில் பலரும் ஒரு வேளை உள்ளபடியே நம்பிக் கொண்டிருந்தவற்றைத்தான் அறிவித்திருக்கக் கூடும். ஆனால் அப்படி எதுவும் நேர்ந்திடவில்லை!

அறிவுடைமை

ஆண்டுகள் உள்ளிட்ட காலக்கணக்கீடுகளை ஏற்படுத்தியிருப்பது மனிதர்களது சவுகரியத்திற்காகத் தானேயன்றி பிரபஞ்சத்தின் செயல்பாடுகளில் இதற்கெல்லாம் எந்த பங்கும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ளும் போதுதான் இத்தகைய அறியாமைகள் மற்றும் மூட நம்பிக்கைகளின் பாற்பட்ட அறிக்கைகளின் அர்த்தமின்மையை உணர்ந்திட இயலும்.
உலகம் அழியும்போது அதை தடுக்க எந்தச் சக்தியாலும் முடியாது. ஆனால் அது எப்போது நிகழும் என்பதை திட்டவட்டமாக எவராலும் கூறவும் முடியாது. ஆகவே உலக அழிவை பற்றி தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்களை பொருட்படுத்தாமல் அது பற்றிய அனாவசியமான அச்சங்களை விட்டு விலகி ஆக்கப்பூர்வமான வகையில் வாழ்க்கையை வாழ்வதுதான் அறிவுடைமையாகும்.

2012/06/20


கணணியில் வரவிருக்கும் தொழில்நுட்ப மாற்றங்கள்

அடுத்த 10 ஆண்டுகளில் கணணியில் என்ன என்ன மாற்றங்கள் வரும் என்பதை கணித்து நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.
1. அதிக இடத்தை எடுத்துக் கொண்டு மெதுவாகவும், சூடாகவும் இயங்கும் சிலிகான் நீக்கப்படும். கணணியின் புதிய கட்டமைப்பில் குறைவான அளவில் எலக்ட்ரான்களும் அதிக அளவில் ஆப்டிகல் இழைகளும் பயன்படும். ஆப்டிகல் கணணிகள் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

2. கணணிகள் திருடு போகாது. பயோமெட்ரிக் பயன்பாடு பரவலாகி, கைரேகைகளுக்கு மட்டுமே கணணியின் கதவு திறக்கும்.

3. கீ போர்டுகள் ஓரம் கட்டப்படும். டச் ஸ்கிரீன் இப்போதே வந்துவிட்டது. இனி சைகை மூலம் நாம் கணணியையும், மென்பொருள் அப்ளிகேஷனையும் இயக்கலாம். அடுத்ததாக நம் குரல் மூலமே அனைத்தையும் இயக்கும் வழிகள் கண்டறியப்படும்.

4. கணணிகள் கையடக்க சாதனமாக மாறும். அலுவலகத்தில் டெஸ்க்குகளில் உள்ள இணைப்புகளில் இணைத்த பின்னர், டாப்பில் உள்ள பெரிய திரைகளில் கணணிகள் இயங்குவதைப் பார்க்கலாம். எனவே டெஸ்க்டாப் கணணி இனி டெஸ்க்கில் உள்ள டாப் கணணியாக இயங்கும்.

5. வீடுகளில் உள்ள கணணிகள் நமக்காக, நம் பெர்சனல் தேவைகளுக்காக இயங்கும். நாம் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் நம்மை ஓய்வெடுக்கச் சொல்லி, நமக்காக சாதனங்களை இயக்கும். சமையல், வாஷிங், டிவி, ஏர்கண்டிஷனர் இயக்கம் ஆகியவற்றைக் கணணியே பார்த்துக் கொள்ளும்.

6. டிவிடிக்கள் பல டெராபைட்டுகள் கொள்ளளவினைக் கொண்டிருக்கும். பிளாஸ்டிக் பிளாட்டர் படு வேகத்தில் சுழலும். ஹோலோ கிராபிக் தொழில் நுட்பத்தில் எழுதுவதற்கு ஒரு பக்கத்தில் ஒரு லேசரும், இன்னொரு பக்கத்தில் இன்னொன்றுமாக இயங்கும்.

7. இப்போதிருக்கும் சிபியு அப்படியே இருக்கும். ஆனால் எலக்ட்ரானிக் மைக்ரோ ப்ராசசருக்குப் பதிலாக ஆப்டோ எலக்ட்ரானிக் இன்டக்ரேய்டட் சர்க்யூட் அமைக்கப்படும்.

இதனை ஸ்விட்ச் ஆன் செய்திட சிலிகான் இருக்கும். ஆனால் மற்ற இயக்க வேலைகளை ஆப்டிக்ஸ் பார்த்துக் கொள்ளும். தற்போது கிடைக்கும் இயக்க வேகத்தினைக் காட்டிலும் 100 மடங்கு அதிக வேகத்தில் சிபியு இயங்கும்.

8. இனி ராம் மெமரி ஹோலோகிராபிக் ஆக இருக்கும். இது முப்பரிமாணம் உடையதால், எத்தனை அடுக்குகளையும் இது கொள்ளும். எனவே கொள்ளளவு கற்பனையில் எண்ண முடியாத அளவில் அமையும்.

9. இன்டெல் நிறுவனத்தின் புதிய ப்ராசசர்கள் எண்ணிப் பார்க்க இயலாத வேகத்தில் செயல்படும்.

10. இன்டர்நெட் டிவி புழக்கம், கணணியுடன் இணைக்கப்படும் டிவி, ஸ்மார்ட் போன், பல மானிட்டர்களுடன் இயங்கும் கணணி, புளு ரே டிவிடி, விண்டோஸ் புதிய சிஸ்டம் தரும் முழு பயன்பாடு, நம் வேலைகளுக்கேற்ப இயக்க வேகத்தை மாற்றிக் கொள்ளும் சிப் என வரும் ஆண்டுகளில் முற்றிலும் புதிய தொழில்நுட்பங்கள் வர இருக்கின்றன.

2012/06/14


அனைத்து உலாவிகளுக்குமான ஷொர்ட் கட் கீகள்




ஒவ்வொரு உலாவியும் தனக்கென சில கட்டமைப்புகளையும், வழிமுறைகளையும் வைத்துள்ளன. இதற்கான ஷொர்ட் கட் கீ தொகுப்புகளும் அந்த உலாவிக்கே உரித்தானவையாக இருக்கும்.
இருப்பினும் பல ஷொர்ட் கட் கீகள் அனைத்து உலாவிகளும் ஒரே மாதிரியான இயக்கத்தினைத் தருவதாகவே அமைந்துள்ளன.

இவற்றைத் தெரிந்து கொண்டால் நாம் எந்த உலாவியைப் பயன்படுத்தினாலும், எளிதாகவும் வேகமாகவும் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். அத்தகைய ஷொர்ட் கட் கீ தொகுப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

1. டேப்களுக்கான சில ஷொர்ட் கட் கீகள்:

Ctrl+1-8– இடமிருந்து வலமாக, எண்ணுக் கேற்றபடியான டேப்பில் உள்ள தளத்திற்குச் செல்லும்.

Ctrl+9 – கடைசி டேப்பிற்குச் செல்லும்.

Ctrl+Tab – அடுத்த டேப்பிற்குச் செல்லும். அதாவது அப்போது இருக்கும் டேப்பிற்கு வலதுபுறம் உள்ள டேப்பிற்குச் செல்லும்.

இந்த செயல்பாட்டினை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவியை தவிர, மற்ற உலாவிகளில்,

Ctrl+Page Up கீ தொகுப்பு செயல்படுத்தும்.

Ctrl+Shift+Tab –முந்தைய டேப்பிற்குச் செல்லும். அதாவது அப்போது உள்ள டேப்பிற்கு இடது புறம் உள்ள டேப்பிற்குச் செல்லும். இந்த செயல்பாட்டினை, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவியைத் தவிர மற்ற உலாவிகளில் Ctrl+Page Down கீ தொகுப்பு செயல்படுத்தும்.

Ctrl+W, Ctrl+F4– அப்போதைய டேப்பினை மூடும்.

Ctrl+Shift+T– இறுதியாக மூடிய டேப்பினைத் திறந்து தளத்தைக் காட்டும். இப்படியே இந்த கீகளை அழுத்த, அழுத்த, முந்தைய மூடப்பட்ட டேப்களில் உள்ள தளங்கள் திறக்கப்படும்.

Ctrl+T– புதிய டேப் திறக்கப்படும்.

Ctrl+N– புதிய பிரவுசர் விண்டோ ஒன்று திறக்கப்படும்.

Alt+F4– அப்போதைய விண்டோ மூடப்படும். உலாவிகளில் மட்டுமின்றி, அனைத்து அப்ளிகேஷன்களிலும் இந்த கீ தொகுப்பு இதே செயல்பாட்டினை மேற்கொள்ளும்.

2. மவுஸ் சார்ந்த ஷொர்ட் கட் கீ தொகுப்புகள்:

Middle Click a Tab– டேப்பில் கர்சரைக் கொண்டு சென்று, மவுஸின் நடுமுனையைக் கிளிக் செய்தால், டேப் மூடப்படும்.

Ctrl+Left Click, Middle Click –பின்னணியில் இயங்கும் டேப்பில், லிங்க் ஒன்றைத் திறக்கும்.

Shift+Left Click– லிங்க் ஒன்றில் கிளிக் செய்திட, அதற்கான தளம் புதிய உலாவி விண்டோவில் திறக்கப்படும்.

Ctrl+Shift+Left Click– லிங்க் ஒன்றில் கிளிக் செய்திட, தொடர்புடைய தளம் புதிய முன்புறமான டேப்பில் திறக்கப்படும்.

3. பிரவுசரில் உலா வருதல்:

Alt+Left Arrow, Backspace– பின் நோக்கிச் செல்ல.

Alt+Right Arrow, Shift+Backspace – முன் நோக்கிச் செல்ல.

F5– மீண்டும் தொடக்கத்திலிருந்து தளத்தை இறக்கித் தர.

Shift+F5 – தளத்தை இறக்குவதுடன், கேஷ் மெமரியை ஒதுக்கித் தரும். இணைய தளம் முழுமையும் புதியதாக இறக்கித் தரப்படும்.

Escape – தளம் இறக்கம் செய்வது உடனடியாக நிறுத்தப்படும்.

Alt+Home – ஹோம் பேஜ் எனக் குறிக்கப்பட்ட தளம் திறக்கப்படும்.

4. பெரிதாக்குதல்:

Ctrl and +, Ctrl+Mousewheel Up – ஸூம் என்ற வகையில் தளக் காட்சி பெரிதாக்கப்படும்.

Ctrl and -, Ctrl+Mousewheel Down – ஸூம் என்ற வகையில் தளக் காட்சி சிறிதாக்கப்படும்.

Ctrl+0 – மாறா நிலையிலான அளவில் தளம் காட்டப்படும்.

F11– மொனிட்டரின் திரையில் முழுக் காட்சி காட்டப்படும்.

5. மவுஸ் உருளை உருட்டுதல்:

Space, Page Down– தளத்தின் ஒரு பிரேம் கீழாகச் செல்லும்.

Page Up– ஒரு பிரேம் மேலாகச் செல்லும்.

Home – தளத்தின் பக்கத்தின் தொடக்கத்திற்குச் செல்லும்.

End – தளத்தின் பக்கத்தின் கீழ்ப் பகுதிக்குச் செல்லும்.

Middle Click – மவுஸ் கர்சர் வேகமாக, திருப்பும் திசைக்கேற்ப, கீழாகவோ, மேலாகவோ செல்லும்.

6. அட்ரஸ் பார்:

Ctrl+L, Alt+D, F6– அட்ரஸ் பாருக்கு கர்சர் இயக்கம் செல்லும், இதில் டைப் செய்திட ஏதுவாக.

Ctrl+Enter – www. என்பதை முன்னாலும், .com என்பதனைப் பினாலும் இணைக்கும்.

Alt+Enter – அட்ரஸ் பாரில் உள்ள முகவரிக்கான தளத்தினை புதிய டேப்பில் திறக்கும்.

7. தேடல்:

Ctrl+K, Ctrl+E – உலாவியில் உள்ள சர்ச் பாக்ஸ் உள்ளே கர்சர் இயக்கம் செல்லும். உலாவிக்கென சர்ச் பாக்ஸ் இல்லை என்றால், அட்ரஸ் பாருக்குச் செல்லும். (இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், Ctrl+K செயல்படுவதில்லை, அதற்குப் பதிலாக அதே செயல்பாட்டினை Ctrl+E என்ற கீகள் செயல்படுத்தும்)

Alt+Enter – புதிய டேப் திறக்கப்பட்டு, சர்ச் பாக்ஸில் தேடல் தொடங்கும்.

Ctrl+F, F3 – அப்போதைய பக்கத்தில் தேடலைத் தொடர, அந்தப் பக்கத்தில் உள்ள சர்ச் பாக்ஸைத் திறக்கும்.

Ctrl+G, F3 – தேடப்படும் சொல் இடம் பெறும் அடுத்த இடம் கண்டறியப்படும்.

Ctrl+Shift+G, Shift+F3– தேடப்படும் சொல் இடம் பெறும் முந்தைய இடம் கண்டறியப்படும்.

8. ஹிஸ்டரி மற்றும் புக்மார்க்ஸ்:

Ctrl+H – பிரவுசிங் ஹிஸ்டரி திறக்கப்படும்.

Ctrl+J– டவுண்லோட் ஹிஸ்டரி திறக்கப்படும்.

Ctrl+D – அப்போதைய இணையதளம் புக்மார்க் செய்யப்படும்.

Ctrl+Shift+Del – பிரவுசிங் ஹிஸ்டரியை அழிப்பதற்கான விண்டோ திறக்கப்படும்.

9. மற்ற செயல்பாடுகள்:

Ctrl+P– அப்போதைய தளப் பக்கத்தினை அச்செடுக்கும்.

Ctrl+S – உங்கள் கணணியில், அப்போதைய தளம் கோப்பாக பதியப்பட்டு சேவ் செய்யப்படும்.

Ctrl+O –உங்கள் கணணியில் இருந்து ஒரு கோப்பு திறக்கப்படும்.

Ctrl+U– அப்போதைய தளப்பக்கத்திற்கான, சோர்ஸ் கோட்(source code) திறக்கப்படும். (இது இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் திறக்கப்பட மாட்டாது).

2012/06/11


மாவீரன் அலெக்சாந்தர்



பேரரசன் அலெக்சாந்தர் அல்லது மகா அலெக்சாண்டர் என்பவன் கிரேக்கத்தின்  பகுதியான மக்கெடோனின் மன்னன் (கிமு 336–323). மக்கெடோனின் மூன்றாம் அலெக்சாண்டர் எனவும் இவன் அழைக்கப்படுகிறான். உலக வரலாற்றில் பெரும் வெற்றிகளைப் பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவனாக இவன் போற்றப்படுகிறான். இவன் ஈடுபட்ட எந்தப் போரிலும் தோல்வியடைந்ததில்லை எனவும் சொல்லப்படுகிறது. இவனது காலத்தில் பண்டைய கிரேக்கர்களுக்குத் தெரிந்த உலகின் பெரும் பகுதியைக் கைப்பற்றி ஆண்டான்.

அலெக்சாந்தர் அவனது தந்தை இரண்டாம் பிலிப் இறந்த பின்னர் மக்கெடோனின் மன்னனாக முடிசூடிக்கொண்டான். பிலிப் மன்னன் பண்டைய கிரேக்கப் பெருநிலப்பரப்பைச் சேர்ந்த பல நகரங்களை மக்கெடோனிய ஆட்சியின் கீழ் ஒன்றிணைத்தான். அலெக்சாந்தர் கிரேக்கத்தின் தெற்குப்பகுதி நகரங்களை முறியடித்து அவைகளை மக்கெடோனிய ஆட்சியின் கீழ் இணைத்தான். பின்னர் கிழக்குப் பகுதியில் அக்கீமனிட் பாரசிகப் பேரரசைக் கைப்பற்றினான். இவன் அனத்தோலியா, சிரியா, பினீசியா, காசா, எகிப்து, பாக்ட்ரியா, மெசொப்பொத்தேமியா ஆகிய நாடுகளைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல், தனது பேரரசின் எல்லைகளை இந்தியாவின் பஞ்சாப் வரை நீட்டியிருந்தான்.

இவன் இறப்பதற்கு முன்பே, அரேபியக் குடாநாட்டுக்குள் தனது வணிக நடவடிக்கைகளையும், படை நடவடிக்கைகளையும் விரிவாக்குவதற்குத் திட்டமிட்டிருந்தான். இதன் பின்னர் மேற்கே கார்த்தேஜ், ரோம், ஐபீரியக் குடாநாடு ஆகியவற்றை நோக்கிச் செல்லவும் அவனிடம் திட்டம் இருந்தது. அலெக்சாந்தர் பல வெளிநாட்டவர்களைத் தனது படையில் சேர்த்திருந்தான். இதனால் சில அறிஞர்கள் இவன் இணைப்புக் கொள்கையைக் கடைப்பிடித்தான் என்றனர். தனது படை வீரர்களையும், பிற நாட்டுப் பெண்களை மணம் செய்யுமாறு ஊக்கப்படுத்தினான். அவனும் கூட இரண்டு வெளிநாட்டு இளவரசிகளை மணம் செய்தான்.

பன்னிரண்டு ஆண்டுகாலத் தொடர்ச்சியான படை நடவடிக்கைகளுக்குப் பின்னர் அலெக்சாந்தர் காலமானான். இவனது இறப்புக்கான காரணம் தெளிவில்லை. மலேரியா, நஞ்சூட்டல், தைபோய்ட்டுக் காய்ச்சல், வைரஸ் தொற்று போன்ற ஏதாவது ஒன்றால் அல்லது அளவு மீறிய குடிப்பழக்கத்தால் இறந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. அலெக்சாந்தரின் விரிவாக்கங்களும், மரபுரிமைப் பேறுகளும் (legacy) அவன் இறந்து பலகாலங்களின் பின்னரும் நிலைத்திருந்ததுடன், தொலைதூர இடங்களிலும், கிரேக்கக் குடியேற்றங்களும், அதன் பண்பாட்டுச் செல்வாக்கும் பல நூற்றாண்டுகள் நீடிப்பதற்கு உதவின. இக்காலம் ஹெலெனியக் காலம் எனப்படுவதுடன், இது கிரேக்கம், மையக்கிழக்கு, இந்தியா ஆகியவற்றின் ஒரு கலப்புப் பண்பாடாக விளங்கியது.


வம்சாவழி மற்றும் குழந்தைப்பருவம்

அலெக்சாண்டர் பண்டைய கிரேக்க நாட்காட்டியின் மாதமான ஹெகடோம்பியன் மாதத்தில் ஆறாம் நாள் (தற்போதைய நாட்காட்டியில் தோராயமாக கிமு 356 ஆம் ஆண்டு சூலை மாதம் 6 ஆம் நாள்) அன்று பண்டைய கிரேக்கப் பேரரசின் மக்கெடோனின் தலைநகர் பெல்லாவில் அவரது தந்தை இரண்டாம் பிலிப்பின் நான்காம் மனைவி ஒலிம்பியாசுக்கும் பிலிப்புக்கும் மகனாக பிறந்தார். இவரது தாயார் ஒலிம்பியாசின் தந்தை எபிராஸ் நாட்டின் அரசர் நியாப்டோலேமஸ் ஆவார். இவரது தந்தை இரண்டாம் பிலிப்பிற்கு ற்கு ஏழு அல்லது எட்டு மனைவிகள் இருந்த போதிலும் இவரது தாயார் ஒலிம்பியாஸ் மூலம் மட்டுமே சட்டப்பூர்வ வாரிசு உண்டு. பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர் புளூட்டாக்கின் கூற்றுப்படி அலெக்சாண்டரை சுற்றிலும் அவரது குடும்பத்தில் பல்வேறு சகாப்தம் படைத்த மாவீரர்கள் இருந்துள்ளனர் என்று தெரியவருகிறது. அலெக்சாண்டரின் இளமைப்பருவத்தில் அவர் ஒரு செவிலியரால் வளர்க்கப்பட்டார். அலெக்சாண்டரும் பிற்காலத்தில் அவரது படையினை வியூகம் வகுக்கும் க்ளைடஸ் தி ப்ளாக் என்னும் பதவியில் அமர்ந்த அவரது சகோதரியுமான லனைகியும் இவர்களது தாயான ஒலிம்பியாசின் உறவினாரான லியோநிடாஸ் என்பவரிடம் கட்டுபாடான கல்விமுறையில் பயின்றனர். அலெக்சாண்டர் மக்கெடோனியானின் மென்மையான இளைஞனாக வளர்ந்தார். யாழிசை மீட்டுவதிலும், படிப்பதிலும், போர்க்கலையிலும், வேட்டையாடுவதிலும் வல்லவராக திகழ்ந்தார்.

அலெக்ஸாண்டர் பத்தாவது வயதில் இருந்தபொழுது தேச்சாலி என்னுமிடத்தில் இருந்து வந்த ஒரு வணிகர் அவரது தந்தையிடம் ஒரு குதிரையை விற்க முனைந்தார். அப்போது அந்தக் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக யாருக்கும் அடங்காமல் இருப்பதை உணர்ந்து அவரது தந்தை பிலிப் அதை வாங்காமல் வெளியில் அனுப்ப நினைத்தார். அந்த தருணத்தில் அங்கிருந்த அலெக்சாண்டர் அந்த குதிரையானது தனது சொந்த நிழலை பார்த்தே மிரட்சி அடைவதை கண்டறிந்தார். அதோடு அந்த குதிரையை தானே பழக்கப்படுத்தி கொள்வதாகவும் தெரிவித்தார். சொன்னதைப்போல அதை அடக்கி பழக்கப்படுத்தியும் காட்டினார். புளூட்டாக் இதை தனது குறிப்பில் மிக விரிவாக புகழ்ந்து குறிப்பிடுகிறார். அரசர் பிலிப் தனது மகனாகிய அலெக்சாண்டரிடம், "மகனே நீ கண்டிப்பாக இந்த உலகத்தையே வெல்லப்போகிறாய், உன்னை பொருத்தமட்டில் மக்கெடோன் மிகச்சிறியது," என்று கூறினதாக புளூட்டாக் விளக்குகிறார். அதோடு அந்த குதிரையை அலெக்சாண்டருக்கே பரிசாக அளித்தார்.
அலெக்சாண்டர் அந்த குதிரைக்கு பூசிஃபலாஸ் (ox-head) என்று பெயரிட்டார். அந்த பூசிஃபலாஸ் என்கிற குதிரை தான் மாவீரன் அலெக்சாண்டரை இந்திய துணைக்கண்டம் வரை போர்களினூடே சுமந்து வந்தது. பிற்காலத்தில் வயோதிகம் (தனது 30ஆம் வயதில்) காரணமாக அந்த குதிரை இறந்த பின்னர் அதன் நினைவாக ஒரு நகரத்திற்கு அலெக்சாண்டர் பூசிஃபலா (Bucephala) என்று பெயரிட்டார்.

இளமைப்பருவமும் கல்வியும்


மாவீரன் அலெக்ஸாண்டருக்கு அரிஸ்டாட்டில் கல்வி போதித்தல்
அலெக்சாண்டரின் 13 ஆம் வயதின் ஆரம்பத்தில் அவரது தந்தை அவருக்கு கல்வி போதிக்க ஐசோக்ரேட்ஸ், ஸ்பீயூசிபஸ் போன்ற மிகச்சிறந்த அறிஞர்களை நியமித்தார். அவர்களுக்கு பின்னராக இரண்டாம் பிலிப் மன்னர் அரிஸ்டாட்டிலைக் கல்வி போதிக்க நியமித்தார். கல்வி போதிப்பதற்காக மைசாவில் இருந்த நிம்பஸ் கோயிலை வகுப்பறையாக கொடுத்தார். அலெக்சாண்டர் கல்விகற்று திரும்பும் தருணத்தில் அவரது ஆசிரியரான அரிஸ்டாட்டிலின் சொந்த நகரான தன்னால் அழிக்கப்பட்ட ஸ்டாகிரா-வை மீண்டும் நிர்மாணித்து தருவதென ஒப்புக்கொண்டார். மேலும் அங்கு மக்களை குடியேற செய்து அங்கிருந்து அடிமைகளாக பிரிக்கபட்ட மக்களை விடுவிப்பதாகவும் உறுதியளித்தார்.
மைசா கோயிலானது டாலேமி, ஹேஃபைசன் மற்றும் காசந்தர் போன்ற இடங்களை போலவே இதுவும் அலெக்சாண்டரும் மற்றும் மாக்கெடோனியானின் மேன்மக்கள் வகுப்பினரின் குழந்தைகளும் பயிலும் வாரிய பள்ளி போலானது. அவருடன் பயின்ற பல மாணவர்கள் பிற்காலத்தில் அலெக்சாண்டரின் உற்ற நண்பர்களாகவும் நம்பிக்கைக்குரிய அரசு அதிகாரிகளாகவும் திகழ்ந்தனர். மேலும் சிலர் துணைவராகவும் இருந்ததாக அறியப்படுகிறது. அரிஸ்டாட்டில் அலெக்சாண்டருக்கும் அவரது தோழர்கள் அனைவருக்கும் மருத்துவம், தத்துவம், நன்னெறி, மதம், தருக்கம், மற்றும் கலை போன்றவற்றை பயிற்றுவித்தார். அரிஸ்டாட்டிலின் போதனையில் அலெக்சாண்டர் அவரை சுற்றியுள்ள திசைகள் அனைத்திலும் உள்ள நாடுகளை அறிவது போன்ற பாடங்களில் மேம்பட்டிருந்தார். குறிப்பாக அரிஸ்டாட்டில் அலெக்சாண்டரை திசையனைத்திலும் உள்ள நாடுகளை பற்றிய கல்விதனை போதித்து வல்லுனராக மாற்றினார். அந்த அறிவே பின்னாளில் அலெக்சாண்டரை உலகம் முழுமையையும் சுற்றிவந்து வெற்றிகொள்ள வழிவகுத்தது.


மாக்கெடோனின் ஆட்சியாளராகவும் எழுச்சியும்


இரண்டாம் ஃப்லிப், அலெக்ஸாண்டரின் தந்தை
தனது 16 ஆம் வயதில் தனது கல்வியை அரிஸ்டாட்டிலிடம் பயின்று முடித்தார் அலெக்சாண்டர். பய்சான்டியான் உடனான மன்னர் பிலிப்பின் வாரிசு போட்டியில் வெற்றிபெற்ற அலெக்சாண்டர் வெளிப்படையான ஒரே வாரிசாக அறிவிக்கப்பட்டார். பிலிப் இல்லாத காலகட்டங்களில் திரேசிய நாட்டினர் மாக்கெடோனின் மீது படையெடுத்தனர். அலெக்சாண்டர் உடனே அதற்குத் தக்க பதிலடி கொடுத்தார். அவர்களை தனது எல்லையில் இருந்து ஓட ஓட விரட்டியடித்தார். பின்னர் கிரேக்கத்தில் குடியேற்ற ஆதிக்கத்தை விதைத்தார். அது மட்டுமல்லாது அலெக்சாண்ட்ரோபோலிஸ் என்கிற நகரையும் நிர்மாணித்தார்.
பின்னர் பிலிப் திரும்பி வந்ததும் அலெக்சாண்டரை ஒரு சிறு படைக்குத் தலைமையாக நியமித்து அனுப்பி தெற்கு திரேசை கைப்பற்றி வரப் பணித்தார். கிரேக்கத்தின் பெரிந்தஸ் நகரத்திற்கு எதிரான போரில் அலெக்சாண்டர் தனது தந்தையின் உயிரை காப்பாற்றினார். இதை தொடர்ந்து கிரேக்கத்தில் நடந்த பல போர்களில் தனது தந்தையின் வழிகாட்டுதலின் பேரில் நிறைய வெற்றிகளை ஈட்டினார்.

பின்னாளில் சில காலம் கழித்து கி.மு.338 ல் அலெக்சாண்டரின் படைகளும் அவரது தந்தை இரண்டாம் பிலிப்பின் படைகளும் இணைந்தன. மேலும் அவை தெற்கு தெர்மொபைலியா வழியாக வலம் வந்தன. பின்னர் தேபான் காரிசன் கூட்டத்திடம் வெற்றியை ஈட்டிய பின்னர் தேபெஸ் மற்றும் ஏதென்சிலிருந்து சிலநாள் பயண தூரத்திலிருந்த ஏலாடிய நகரை வெற்றி பெற்றனர். பின்னர் டிமொஸ்திநீசால் ஆளப்பட்ட ஏதென்சு, தேபெசு மாக்கெடோனியாவை வெல்ல முயன்றனர். அதேநேரம் ஃபிலிப்பும், ஏதென்சும் தேபெஸ் மீது முகாமிட்டு வெல்ல முயன்றனர். ஆனால் இந்தப் போட்டியில் ஏதென்ஸ் வென்றது. பின்னர் ஃபிலிப் அம்பிச்ஸா நோக்கி சென்றார்.

ஃபிலிப் தெற்கு நோக்கி சென்ற பொழுது அவரது எதிரிகள் கேரோனிய பகுதியில் அவரை சுற்றி வழிமறித்து தாக்கினர். அப்பொழுது நடந்த சண்டையில் அலெக்ஸாண்டர் வலது புறமிருந்த படையையும் அவரது தந்தை இடப்புறமிருந்த படையையும் திறம்பட வழிநடத்தி நம்பிக்கைக்குரிய தளபதிகளின் துணையுடன் அந்த போரில் வெற்றி கண்டனர்.
கேரோனிய போரில் வென்ற பிறகு ஃபிலிப்-ம் அலெக்ஸாண்டரும் எதிர்ப்பில்லாத பெலோபோன்நீஸ்-ஐ வென்றனர். பின்னர் அவர்கள் ஸ்பார்ட்டாவை அடையும் வரைக்கும் அடுத்திருந்த அனைத்து நகரங்களனைதிலும் அவர்களுக்கு வரவேற்பே கிடைத்தது. ஸ்பார்ட்டாவை தவிர்த்து தான் வெற்றி பெற்ற அனைத்து நகரங்களையும் இணைத்து ஹெல்லேனிக் கூட்டாட்சியை ஏற்படுத்தினார் ஃபிலிப். பின்னன் அதற்க்கு ஹெகேமொன் கூட்டமைப்பு என பெயரிட்டார். மேலும் அந்த கூட்டமைப்பை பாரசீக சாம்ராஜ்யத்தின் மீது படையெடுக்க பணித்தார்.


நாடு கடத்தலும் திரும்புதலும்

பெல்லா நாட்டிற்கே திரும்பிய ஃப்லிப் அந்த நாட்டில் கிளியோபாட்ரா யூரிடைஸ் என்ற பெண்ணை மணந்துகொண்டார். இந்த திருமணத்தின் மூலம் ஃப்லிப்பின் வாரிசு என்கிற அலெக்ஸாண்டரின் நிலைமை கீழிறங்கியது, ஏனென்றால் அலெக்ஸாண்டரின் தாயார் பெல்லாவை சேர்ந்தவரல்லர். இதன் மூலம் கிளியோபாட்ராவிற்கு பிறக்கும் குழந்தையோ அல்லது அவரது உறவில் நெருங்கிய ஆணோ தான் அரியணை ஏற முடியும் என்கிற நிலை உருவானது. இவ்வாறிருக்கையில் ஃப்லிப்பின் உறவினரும் அவரின் படைத்தளபதியுமான அட்டாலூஸ் திருமண விருந்தின் பொழுது மதுபோதையில் சட்டபடியான நீராடி வாரிசுக்கே அரியணை என்று பிரார்த்தனை செய்தார்.

இந்த பிரச்சனை பெரிதாகி வெடித்த பொழுது சதிகாரர்களினால் அலெக்ஸாண்டருக்கு தொல்லைகள் பெருகின அப்பொழுது இளவரசானாக இருந்த அலெக்ஸாண்டர் தனது தாயாருட மாசிடோனை விட்டு வெளியேறினார். தாயை மொலோசியன்ஸ் நாட்டின் தலைகரான டோடோனாவில் இருந்த அவரது சகோதரரான மன்னர் எபிரசின் முதலாம் அலெக்ஸாண்டர் வீட்டில் விட்டுவிட்டு தனது பயணத்தை தொடர்ந்தார். தனது பயணத்தில் அவர் இலிரியன் அரசரிடம் சென்று தஞ்சம் புகுந்தார், அலெக்ஸாண்டர் சில வருடங்களுக்கு முன்னர் அலெக்ஸாண்டரின் படையினரால் தோற்க்கடிக்கப்பட்ட இலிரியன் மன்னர் அகதியாக அலெக்ஸாண்டர் வந்திருந்த போதும் அவரை ஒரு விருந்தாளியாகவே பாவித்து நடத்தினார். இந்த நேரத்தில் அனைத்து ராணுவ பயிற்சியிலும் தேர்ச்சி பெற்ற தனது மகனை மீட்க மன்னர் ஃப்லிப் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதற்கிடையில் அலெக்ஸாண்டருடைய குடும்ப நண்பரான டிமரட்டஸ்-கோரிந்தியான் என்பவற்றின் முயற்சியால் அலெக்ஸாண்டர் ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் மாசிடோனியாவிற்கு வந்தார்.

பின்வந்த வருடங்களில் பாரசீகத்தின் காரியாவின் ஆளுநர் அலெக்ஸாண்டரின் சகோதரர் ஃப்லிப் அரிடியாசுக்கு அவரது மகளை மணமுடித்து கொடுக்க முன்வந்தார். இது அலெக்ஸாண்டர் மற்றும் அவரது தாயார் ஒலிம்பியாஸுக்கும் அலெக்ஸாண்டரின் நண்பர்களுக்கும் மன்னர் இரண்டாம் ஃப்லிப் தனது மற்றொரு மகானான அரிடியாசை தனக்கு அடுத்தபடியான அரியணைக்கான வாரிசாக கருதுவது போல தோன்றியது. இதனால் ஒரு தூது மூலம் இந்த திருமண ஏற்பாட்டை அலெக்ஸாண்டர் தடை செய்ய நினைத்தார். அந்த பெண்ணை அரிடியாசுக்கு பதிலாக தானே மணமுடித்து கொள்ள முயற்சித்தார். இதையறிந்த மன்னர் இரண்டாம் ஃப்லிப் இளவரசன் அலெக்ஸாண்டரை காரியா ஆளுநரின் மகளை கவர நினைத்த செயலுக்காக கண்டித்தார். மேலும் அலெக்ஸாண்டருக்கு இதைவிட சிறந்த ஒரு இடத்தில் பெண்ணை மனைவியாக்க நினைப்பதாக கூறினார். இந்த விளைவில் அலெக்ஸாண்டரின் நான்கு நண்பர்களை (ஹர்பளுஸ், நியர்சுஸ், டாலமி, மற்றும் எரிகையுஸ்) மன்னர் நாடுகடத்தினார்.


மாசிடோனின் மன்னனாக



கி.மு.336ல் மாசிடோன் சாம்ராஜ்யம்
வாரிசாக ஏற்றல்
கி.மு.336-ல் ஏகே'யில் ஒலிம்பியாஸின் சகோதரர் எபிரசின் முதலாம் அலெக்ஸாண்டரின் மகள் கிளியோபட்ராவின் திருமணத்தின் பொழுது மன்னர் இரண்டாம் ஃபிலிப் அவரது பாதுகாவல தலைவனால் (பாசநியாஸ்) கொலைசெய்யப்பட்டார். பின்னர் தப்பிசெல்ல முற்பட்ட பொழுது அவரும் மற்றும் அலெக்ஸாண்டரின் இறந்து துணைவர்களும் (பெர்டிக்காஸ் மற்றும் லியோனாடஸ்) அவருடன் சேர்த்து காவலர்களால் பிடித்து கொல்லப்பட்டனர். இதன்பின்னர் அலெக்ஸாண்டர் தனது 20 ஆம் வயதில் மன்னனாக அரியணை ஏறினார்.

வலிமையின் ஒருங்கிணைப்பு



அரியணைக்கு தன்னுடன் போட்டியிட்ட அனைவரையும் வென்று தனி ஒருவராக மகத்தான ஆட்சியை அலெக்ஸாண்டர் துவக்கினார். இதில் தனது உறவினர் நான்காம் அமைண்டாஸ்-ஐ அலெக்ஸாண்டர் இழந்தார். மேலும் லின்செஸ்டிஸ் எல்லைக்கு உட்பட்ட இரு மாசிடோனியன் இளவரசர்களையும் இழக்க நேரிட்டது. மேலும் அலெக்ஸாண்டர் ஒலிம்பியாஸின் துணையுடன் கிளியோபாட்ரா, அட்டாலஸ், மற்றும் பலரை இந்த போட்டியில் கொன்று தீர்த்தார்.

மன்னர் ஃப்லிப்பின் மரணச்செய்தி தேபெஸ், ஏதென்ஸ், தேசாலி, மற்றும் திரேசிய பழங்குடிகள் மேலும் வடக்கு மாசிடோன் ஆகிய இடங்களில் பெரும் கிளர்ச்சியை உண்டாக்கியது. இந்த கிளர்ச்சியை கேள்விப்பட்ட அலெக்ஸாண்டர் உடனுக்குடன் பதில் நடவடிக்கைகளை மேற்கொண்டார். தந்திரமும் செயல்திறனும் ஒருங்கே இணைத்து செயல்பட்ட அலெக்ஸாண்டர் 3000 குதிரைப்படையை கொண்டு தேசாலி நோக்கி பயணித்தார். அப்பொழுது ஒலிம்பஸ் மலைகளுக்கும் ஒஸ்ஸா மலைகளுக்கும் இடையில் த்ரேசியன் படைகளால் சூழபட்டார். அப்பொழுது அலெக்ஸாண்டர் தனது படைகளை ஒஸ்ஸா மலைகளின் மீதாக கடந்து செல்ல ஆணையிட்டார். மறுநாள் காலை திரேசிய படைகள் விழித்தெழுந்த பொழுது தாம் சுற்றி வளைத்த அலெக்ஸாண்டரின் படைகள் தற்பொழுது தங்களை சுற்றி வலைத்திருப்பதை உணர்ந்தனர். பின்னர் அவர்களது குதிரைப்படையையும் தனது குதிரைப்படையுடன் இணைத்துக்கொண்டு அங்கிருந்து பிலோபோநீஸ் நோக்கி பயணித்தார்.

வழியில் தெர்மொபைலியில் முகமிட்ட அலெக்ஸாண்டர் அங்கிருந்த அம்பிக்டையோனிக் கூட்டமைப்பிற்கு தலைவராக அங்கீகாரம் செய்யப்பெற்றார். பின்னர் கோரிந்த் நோக்கி முன்னேறினார். ஏதேன்ஸும் அலெக்ஸாண்டருடன் அமைதியாக பணிந்தது. அலெக்ஸாண்டரும் பழங்குடியினரை மன்னித்தார். அலெக்ஸாண்டரின் சரித்திரத்தில் புகழ் வாய்ந்த சைனிக் டியோஜெனிஸ் உடனான போர் அலெக்ஸாண்டர் கோரிந்தில் தங்கியிருந்த பொழுது தான் நிகழ்ந்தது. அந்த போரில் வென்ற அலெக்ஸாண்டர் டியோஜெனிஸிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்ட பொழுது தந்ததுவ வாதிகள் அலெக்ஸாண்டரிடம் ஏளனமாக பதில் கூறினர். நீங்கள் கொஞ்சம் தள்ளி நிற்க வேண்டும் எங்கள் மீது சூரியனின் ஒளி படவில்லை என்று கூறினர். இந்த பதில் அலெக்ஸாண்டரை பிரமிக்க வைத்தது. அதற்க்கு பதிலாக அலெக்ஸாண்டர் அவர்களிடம் நான் அலெக்ஸாண்டராக இல்லாமலிருந்தால் நான் ஒரு டியோஜெனிஸாகத்தான் இருக்க விரும்புகிறேன் என்று கூறினார். அலெக்ஸாண்டருக்கு கோரிந்தில் தான் அவர் தந்தை ஃபிலிப்பை போன்று முன்னின்று நடத்தும் தலைவர் என்று பொருள் படும் HEGEMON என்ற பட்டம் சூட்டப்பட்டது. மேலும் இதன் பின் தான் த்ரேசியர்களின் போர் மற்றும் பாரசீக போர் போன்றவை அலெக்ஸாண்டரால் நிகழ்த்தபெற்றன.

பால்கன் குடா போர்கள்
ஆசியாவின் மீது போர்தொடுத்து செல்லும் முன்பாக அலெக்ஸாண்டர் தனது வடக்கு மாகாண எல்லைகளை வலுப்படுத்த எண்ணினார். கி.மு.335 வசந்த காலத்தின் பொழுது இவர் பல்வேறு படையெடுப்புகளை நிகழ்த்தினார். ஆம்பிபோலிஸில் இருந்து கிளம்பி கிழக்கு நோக்கி பயணித்து சுதந்திர த்ரேசியா'வை ஹேமுஸ் மலையிலும், ட்ரீபள்ளி, லைகிநூஸ் ஆற்றின் அருகில் டானூப்-ஐயும், கேடே பழங்குடிகளை கடற்கரை போரிலும் வென்றார். பின்னர் க்ளிடுஸில் இல்லிரியா மன்னர், மற்றும் டாலண்டியின் க்ளுகியாஸ் போன்றவர்கள் கிளப்பிய எழுச்சியை போரில் அடக்கினார். அவர்களை போரில் தங்களது படைகளுடன் புறமுதுகிட்டு ஓடசெய்தார். இந்த வெற்றிகளின் மூலம் அலெக்ஸாண்டர் வடக்கு எல்லைப்பகுதிகளில் ஈடு இணையற்ற பலம்கொண்ட பாதுகாப்பை நிறுவினார்.

அலெக்ஸாண்டர் வடக்கில் போர் புரிந்து கொண்டிருந்த சமயத்தில் தேபேஸும், ஏதேன்ஸும் மீண்டு ஒருமுறை கிளர்ச்சியை விதைத்தனர். அலெக்ஸாண்டர் உடனே தெர்க்குக் நோக்கி விரைந்து தேபேஸுடன் போரிட்டு வென்றார். இந்த போரில் தேபேஸின் தாக்குதல் சொல்லிகொள்ளும்படியாக இல்லை. மேலும் அந்த தேசத்தை அலெக்ஸாண்டர் துண்டாடினர். தேபேஸின் இந்த முடிவில் பயந்து போன ஏதென்ஸ் கிரீஸை விட்டு பின்வாங்கி ஓடியது. இதனால் கிரீஸில் தற்காலிகமாக அமைதி நிலைநாட்டப்பட்டது. பின்னர் ஆன்டிபெட்டர்-ஐ ஆட்சிபொறுப்பில் அமர்த்திவிட்டு அலெக்ஸாண்டர் ஆசியா நோக்கி பயணிக்க ஆரம்பித்தார்.


பாரசீக பேரரசில் வெற்றிகள்


அலெக்ஸாண்டரின் சாம்ராஜ்யமும் அவர் போரிட்ட வழித்தடங்களும்
ஆசியா
கி.மு.334 ல் தோராயமாக 48,100 காலாட்படைவீரர்களுடனும், 6,100 குதிரைப்படைவீரர்களுடனும் 120 கப்பல்களில் 38,000 கப்பல்படை வீரர்களுடனும் மாசிடோனில் இருந்து பல்வேறு கிரேக்க மாநிலங்களின் வழியாக அலெக்ஸாண்டரின் படையானது ஹெல்லஸ்போன்ட்-ஐ கடந்தது.
பிரமாண்ட படையுடன் த்ரஸ், பையோனியா, மற்றும் இல்லிரியாவுடன் இணைந்து பாரசீகம் வழியாக ஆசிய மண்ணில் அலெக்ஸாண்டர் தனது ஆளுமையை ஊன்றினார்.

மேலும் ஆசியாவை கடவுளின் பரிசாகவும் கருதினார். இதுவே அலெக்ஸாண்டருக்கு போர் மீதிருந்த நாட்டத்தை விளக்குகிறது. பாரசீகத்தின் க்ராநிகஸ்-ஸில் பெற்ற முதல் வெற்றிக்கு பிறகு ஹளிகர்நாஸ்ஸஸ்-ஸில் அலெக்ஸாண்டர் பாரசீக மாகாணங்களின் சரணடைவை ஏற்றுக்கொண்டார். அலெக்ஸாண்டரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடா-விடம் காரியா அரசின் ஆட்சிபொறுப்பை ஒப்படைத்தார்.
ஹளிகர்நாஸ்ஸஸ்-ஸில் இருந்து அலெக்ஸாண்டர் மலைநாடான லிசியா மற்றும் பம்பிலியா வழியாக பயணித்தார். கண்ணில்பட்ட நாடுகள அனைத்தையும் வெற்றி கொண்டார். பாரசீக கடற்படைத்தளங்கள் அனைத்தையும் அழித்தொழித்தார். பம்பிலியா-விலிருந்து கடலோரங்களை வென்ற பின்பு நிலபகுதிகள் நோக்கி வேகமாக முன்னேறினார்.



போம்பெயில் உள்ள இஸூஸ் போர் நிகழ்வை காட்டும் மொசைக் முறையில் வரையப்பட்ட அலெக்ஸாண்டரின் ஓவியம்
ஆசியாவின் குளிகால போர்தொடர்களை மேற்கொண்ட பின்பு அலெக்ஸாண்டரின் படை சிலிசியன் வாயில் வழியாக கி.மு.333-ல் கடந்து சென்று பாரசீகத்தின் பிரதான படைகளான மூன்றாம் டாரியஸ்-ன் படைகளை நவம்பர் மாதத்தில் இஸ்சுஸ் போரில் வெற்றிபெற்றார்.
இந்த போரில் டாரியஸ் தனது மனைவியுடனும் இறந்து மகள்களுடனும் புறமுதுகிட்டு பின்வாங்கியதால் அவரது படைகள் சின்னாபின்னபடுத்தபட்டன. இதனால் டாரியஸ் தனது தாய் சிசிகம்பிஸையும், மேலும் தனது அளவற்ற செல்வங்களையும் இழக்க நேரிட்டது.
இதன்பின்னர் அலெக்ஸாண்டர் சிரியாவை நோக்கி முன்னேறினார்.
அதில் பெரும்பாலான லிவன்ட் கடற்கரை அரசுகளையும் வென்றார். பின் கி.மு.332-ல் நெடிய போருக்கு பின் டைர்-ஐயும் வென்றார். பின்னர் போரில் பிடிபட்ட போய்க்கைதிகளை கொன்று அவர்களது மனைவி குழந்தைகளை அடிமை வியாபாரிகளிடம் விற்றார்.
எகிப்து


பாரிசின் லூவர் அருங்காட்சியகத்திலுள்ள பண்டைய எகிப்த்தின் எழுத்துமுறையான ஹைரோக்ளிப்ஸில் தோராயமாக கி.மு.330ல் எழுதப்பட்ட (வலமிருந்து இடமாக) அலெக்ஸாண்டரின் பெயர்.
அலெக்ஸாண்டர் டைரை கைப்பற்றிய பின்பு அவரது வழியில் காஜாவை தவிர இடைப்பட்ட அனைத்து எகிப்திய அரசுகளனைத்தையும் சுலபமாக வென்றார். வலிமையாக செரிவூட்டபட்டிருந்த காஜா குன்றுகளின் மீது கட்டபட்டிருந்த நகரமாகும்.

அதை வெல்ல அலெக்ஸாண்டர் கடுமையாக போராட வேண்டி இருந்தது. மூன்று வெற்றிகரமான திடீர் தாக்குதல்களுக்கு பின்பு அதன் வலிமை குன்றி காஜா வீழ்ந்தது. இந்த போருக்கு முன்பு அலெக்ஸாண்டருக்கு இப்போரில் ஏற்பட்டதை போல கடுமையான காயம் ஏற்பட்டதில்லை. அதேபோல ஜெருசலேம் அலெக்ஸாண்டரிடம் போரிடாமலேயே பணிந்து சரணடைந்தது.
கி.மு.332-ல் அலெக்ஸாண்டர் எகிப்தில் நுழைந்தார். அங்கு அலெக்ஸாண்டரை விடுதலையளிக்க வந்த ஒரு போராளியாக தான் மதித்தனர். அங்கு அவர் தன்னை பிரபஞ்சத்தின் தலைவராக உணர்ந்தார். கடவுளின் மகனாக பாவித்தனர். இதற்கு பின்பு தான் அலெக்ஸாண்டர் அடிக்கடி கடவுள் ஜீயஸ்-அம்மோன்-ஐ தனது தந்தையாக சுட்டிக்காட்டினார். மற்றும் தான் மேம்பட்ட உருவம் பொறித்த நாணயங்களையும் வெளியிடலானார்.
இவர் எகிப்தில் தங்கி இருந்த பொழுது எகிப்தில் எழுப்பப்பட்ட அலெக்ஸாண்ட்ரியா-வை நிறுவினார். அதுவே இவரது மறைவிற்கு பிறகு டோலேமைக் சாம்ராஜ்யத்தின் தலைமையாக பிற்காலத்தில் இருந்தது.

ஆஸ்சிரியா மற்றும் பாபிலோனியா




கி.மு.331-ல் அலெக்ஸாண்டர் எகிப்தை விட்டு வெளியேறி கிழக்கு நோக்கி மெசபடோமியா நோக்கி பயணித்தார் (தற்போதைய வடக்கு ஈராக்). அங்கு குகமேலா-வில் நடந்த போரில் மீண்டும் டாரியஸை வீழ்த்தினார். அந்த போரிலும் போர்க்களத்திலிருந்து டாரியஸ் மீண்டும் புறமுதுகிட்டு ஓடினார்.
இந்த முறை அலெக்ஸாண்டர் டாரியஸை அரபெல்லா மலைத்தொடர் வரை துரத்திசென்றார். இங்கு குகமேலாவில் நடந்த சண்டையே இவர்களிருவருக்கிடையே நடந்த கடைசிப்போராகும். அலெக்ஸாண்டர் பாபிலோனை கைப்பற்றிய பொழுது டாரியஸ் அந்த போரிலிருந்து தப்பித்து எக்பட்டானா மலைத்தொடர்களை கடந்து ஓடினார்.

பாரசீகம்
பாபிலோனில் இருந்து அசீமேனிட்-ன் தலைநகரங்களில் ஒன்றான அலெக்ஸாண்டர் சூசா-விற்கு சென்றார். அங்கு பெரும் செல்வங்களை தனதாக்கினார். இவரது படையின் பெரும்பகுதியை பாரசீகத்தின் பிரபல தலைமையிடமான பேர்ஸ்போலிஸ்-ஸுக்கு அனுப்பினார்.
அலெக்ஸாண்டரே தானே தலைமையேற்று அந்த பயணத்திற்கான படைப்பிரிவுகளை தேர்ந்தெடுத்தார். மேலும் அந்த நகரையும் அங்கிருந்த கருவூலத்தையும் சூறாவளியை போன்று கவர்ந்தெடுத்தார். அவர் பேர்ஸ்போலிஸ்-ஸில் நுழைந்த பின்பு அவரது படையினரை அந்த நகரில் பலநாட்கள் கொள்ளையிட அனுமதித்தார். அலெக்ஸாண்டர் பேர்ஸ்போலிஸ் நகரில் ஐந்து மாதங்கள் தங்கினார்.
அங்கு அவர் தங்கியிருந்த பொழுது கிழக்கு சேர்சேஷ் மாளிகையும் அந்த நகரும் தீ விபத்தில் சாம்பலான பின்ம்பு அங்கிருந்து வெளியேறினார். இந்த தீ விபத்திற்கு மதுவிருந்து மாளிகையில் ஏற்பட்ட விபத்து காரணமென்றும், இரண்டாம் பாரசீக போரின் பொழுது ஏதென்ஸின் அக்ரோபோலிஸ் எரிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நிகழ்வென்றும் இரு வேறு காரணங்கள் நிலவின.

ராஜிய வீழ்ச்சியும் கிழக்கும்


இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் உள்ள சிங்க முகம் தரித்த கிரீடம் அணிந்த அலெக்ஸாண்டர் உருவம் பதித்த வெள்ளி நாணயம்
அலெக்ஸாண்டர் டாரியஸை முதலில் மீதியாவில் இருந்தும் பின்னர் பார்தியாவில் இருந்தும் விரட்டியடித்தார்.
அதன் பின்னர் அந்த பாரசீக மன்னன் பெஸ்சுஸ் என்கிற ராஜியத்தினரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டான். அவர்கள் பின்னர் தாங்கள் கொண்டு சென்று கொலைசெய்த நபர் தான் டாரியஸ் மன்னன் என்று அறிவித்தனர்.
பின்னலில் அலெக்ஸாண்டருடன் மத்திய ஆசியாவில் குரில்லா போரிட்டு பின்வாங்கிய ஐந்தாம் அர்தஷெர்ஷெஸ் தான் பெஸ்சுஸ் ராஜ்யத்தின் மன்னன் ஆவார். அலெக்ஸாண்டர் டாரியஸை எரித்தார் அவனது இறுதி சடங்கை அசீமேனிட் வாரிசுகளை செய்ய அனுமதித்தார். டாரியஸ் இறந்த வேளையில் அசீமேனிட் அரியணைக்கு தனது பெயரை சூட்டியிருந்தான். இதுவே அதற்க்கு பின்பு அந்த அரியணை ஏறிய அனைவரின் வீழ்ச்சிக்கு காரணம் என அசீமேனிடை ஆண்டவர்கள் கருதினர்.
அலெக்ஸாண்டர் இல்லாத வேளையில் மாசிடோன்
ஆன்டிபெட்டர்-ஐ ஆட்சி பொறுப்பில் அமர்த்திவிட்டு ஆசியாவில் வெகுகாலம் அலெக்ஸாண்டர் தங்கிவிட்ட்மையால் இரண்டாம் ஃப்லிப்-ன் பழைய காவலர்கள் மாசிடோனின் ஆட்ச்கட்டிலை ஆன்டிபெட்டரிடம் இருந்து பறித்தனர். அலெக்ஸாண்டர் தேபெஸ் நாட்டிலிருந்தும் வெளியேறியமையால் அங்கும் மீண்டும் கிரீஸின் ஆதிக்கம் பெற்றது.
மாறாக ஸ்பார்டா-வின் அரசன் மூன்றாம் அகிஸ் ஆன்டிபெட்டர்-ஐ மெகாலோபோலிஸ் போரில் வென்று கொலைசெய்தான். ஆன்டிபெட்டர் இதை ஸ்பார்டா அரசன் அலெக்ஸாண்டருக்கு அளித்த தண்டனையாக குறிப்பிட்டார். மேலும் அவ்வேளையில் ஆன்டிபெட்ட'ருக்கும் அலெக்ஸாண்டரின் தாயார் ஒலிம்பியாஸுக்கும் இடையே மனக்கசப்பும் இருந்தது.
ஒருவர் மீது ஒருவர் அலெக்ஸாண்டரிடம் இதை புகராகவே அளித்திருந்தனர். மொத்தத்தில் கிரேக்கம் அலெக்ஸாண்டர் இல்லாத வேளையில் மிகவும் சுதந்திரமாக அமைதியாக பழையபடிக்கே திரும்பியிருந்தது. அவர் வென்ற நாடுகளில் பலவற்றை அலெக்ஸாண்டரே விரும்பி திரும்ப போகட்டும் என்று விட்டிருந்தார்.
இந்த வேளையில் அவருடன் இருந்த பல வீரர்கள் மிகுந்த சோர்வில் இருந்தனர். இருந்தாலும் அலெக்ஸாண்டரின் கட்டளைக்கு பணிந்து தொடர்ந்து மாசிடோனியாவிலிருந்து அவருடன் பயணித்திருந்தனர். நீண்ட பயணமும் இடையறாத போர்களும் அவர்களை மிகுந்த சோர்வில் தள்ளியிருந்தது.
அவர்களில் விரும்பிய பலரை திரும்ப ரோம் நகருக்கே அனுப்பியும் வைத்தார். லட்சிய தாகம் கொண்டிருந்தவர்களை மட்டுமே தன்னுடன் வைத்துக்கொண்டார்.

இந்திய போர்



ஆந்த்ரே காஸ்டைன்(1898-1899) வரைந்த ஹைதாஸ்பேஸ்-ஸில் படையின் சிறுகுழுக்கள் போரிடும் காட்சி
இந்திய துணைக்கண்டத்தில் அலெக்ஸாண்டரின் படையெடுப்பு
ஸ்பிடமெனிஸ்-ஸின் மரணத்திற்கு பின்பும், ரோக்ஷனா (பாக்டரியான் இனத்தின் ரோஷனக்) உடனான மரணத்தினாலும் அலெக்ஸாண்டர் இந்திய துணைக்கண்டத்தின் பக்கம் கவனம் செலுத்தினார். காந்தார (தற்போதைய வடக்கு பாகிஸ்தான்) நாட்டின் குழுக்களின் தலைவரும் முன்னாள் ஆளுநருமானவரின் அழைப்பின் பெயரில் அலெக்ஸாண்டர் அங்கு பயணித்தார்.
இண்டஸ் முதல் ஹைடஸ்பஸ் வரை விரிந்திருந்த அப்போதைய டக்ஸ்ஸில்லா ராஜ்யத்தின் அரசர் ஒம்பிஸ், சில மலைவாசி குழுக்கள், மற்றும் ஆஸ்பஸியோய், அஸ்ஸாகேநோயி போன்றவர்கள் அலெக்ஸாண்டரின் நண்பரிடம் பணிய மறுத்தனர்.
கி.மு.327/326-ஆம் ஆண்டின் குளிர்காலங்களில் அலெக்ஸாண்டர் தானே தலைமையேற்று அந்த மலைவாசி குழுக்களுடன் போர் புரிந்தார். குனார் சமவெளியில் ஆஸ்பஸியோய், ஸ்வாத் மற்றும் புநர் சமவெளியில் அஸ்ஸாகேநோயி போன்றோரிடம் சண்டையிட்டார். இவற்றிலெல்லாம் அலெக்ஸாண்டர் எளிதில் வென்ற பொழுதிலும் அவரது தோளில் ஆஸ்பஸியோய்-உடன் சண்டையிட்ட பொழுது காயம் பெரிதானது.
பலம் வாய்ந்த அஸ்ஸாகேநோயி-யிடம் போரிட்ட அலெக்ஸாண்டர் ஓரா மற்றும் ஒர்நோஸ் போன்ற கோட்டைகளில் பெரும் ரத்தவெள்ள சண்டைக்கு பின்பே வெற்றியை ஈட்ட முடிந்தது. அப்பொழுது நடந்த சண்டையில் அலெக்ஸாண்டரின் கணுக்காலில் பலத்த காயம் உண்டானது.
கியூரிடஸ்-ஸின் கூற்றுப்படி
அலெக்ஸாண்டர் மாஸ்ஸாகாவை முற்றிலும் அளிக்கவிட்டாலும் ஓரா-வில் ஏற்படுத்தியதை போன்றே பெரும் சேதத்தை உண்டு பண்ணினார்
என்று அறிய முடிகிறது. மாஸ்ஸாகா-வின் துயர முடிவினால் அங்கிருந்த பெரும்பாலோர் வெளியேறினர். தொடர்ந்து நெருக்கமாக சண்டையிட்ட அலெக்ஸாண்டர் அந்த மலைக்கோட்டைகளை இரத்தம் தோய்ந்த நான்கு நாள் சண்டைக்கு பிறகு வென்றார்.
இதன் பிறகு அலெக்ஸாண்டர் சிந்து நதியை கடந்து வந்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போரில் பஞ்சாப் பகுதியை ஆண்டு வந்த இந்திய மன்னன் போரஸை வென்றார். அதுவரை யானைப்படையையே பார்த்திராத அலெக்ஸாண்டரின் படைகள் முதல் முறையாக யானைப்படையை பார்த்ததில் பிரமித்து பயந்து முதல் முறையாக பின்னோக்கி அடியெடுத்து வைத்தனர். ஹைடஸ்பேஸ்-ஸில் கி.மு.326-ல் நடந்த இந்த போர்களில் ஆச்சர்யம் அடைந்த அலெக்ஸாண்டர் மன்னர் போரஸின் வீரத்தை கண்டு பிரமித்து போரஸிடம் நட்பு பாராட்டினார்.
மேலும் போரஸையே அவன் அதுவரை ஆண்டு வந்த பகுதிகளுக்கு சத்ரப் எனப்படும் பொறுப்பாளியாக நியமித்து அதுவரை அவனது ஆளுகைக்குட்படாத பகுதிகளையும் அவனது கட்டுபாட்டில் கொடுத்தார். கிரீஸில் இருந்து வெகுதூரத்தில் இந்த நிலப்பகுதிகள் தன்னால் கவனித்துக்கொள்ள முடியாத படியால் இந்த பகுதியில் இருந்த பெரும் பகுதியை போரஸின் ஆளுகையின் கீழ் தனது பிரதிநிதியாக நியமித்து கௌரவப்படுத்தினார்.
ஹைடஸ்பேஸ் ஆற்றின் இரு கரைகளிலும் இரு நகரங்களை அலெக்ஸாண்டர் நிர்மாணித்தார் அவற்றில் ஒன்றிற்கு இத்தருணத்தில் இறந்த தனது குதிரையின் நினைவாக பூசிஃபலா என்று பெயரிட்டார். மற்றொரு நகரத்தின் பெயர் நிசிய(வெற்றி) அதுவே தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் மாங் பகுதி.


இந்திய துணைக்கண்டத்தில் அலெக்ஸாண்டரின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகள்

அலெக்ஸாண்டர் படையில் ராணுவப்புரட்சி
போரஸ் மன்னனின் சாம்ராஜ்யத்திற்கு கிழக்கே இருந்த மகத நாட்டின் நந்தர் அரசும் வங்காளத்தின் கங்கரிடை அரசும் அலெக்ஸாண்டரின் மாபெரும் படைகள் அடுத்தது கிழக்கு நோக்கி தங்களை தான் குறிவைக்கும் என்று பயந்தன.
அதே சமயம் ஹைபசிஸ் ஆற்றின் கரையில் அலெக்ஸாண்டரின் படையில் உட்பூசல் வெடித்தது. தொடர்ந்து அவர்கள் கிழக்கு நோக்கி பயணிக்க தயாராக இல்லை. இந்த ஆறு தான் அலெக்ஸாண்டரின் கிழக்கு திசையின் எல்லையாக இருந்தது. அதே சமயம் லட்சிய வேட்கை தணிந்து சோர்ந்திருந்த மாசீடோனிய படையினர் அங்கேயே தங்கினர்.
இதன் காரணமாக அலெக்ஸாண்டர் அவர்களை கங்கை ஆற்றையும் கடக்க வேண்டும் என்று கட்டாயமாக கூறிய பொழுது அலெக்ஸாண்டரை கடுமையாக வெறுத்தனர். மேலும் இந்த ஆற்றை கடக்கையில் வெகுவானோர் இறக்க நேரிடும் என்றும் மறுகரையில் கண்டேரி மற்றும் ப்ரேசி போன்ற அரசர்களிடம் எண்பதாயிரம் எண்ணிக்கை கொண்ட குதிரைப்படையும், இரண்டு லட்சம் காலாட்படை வீரர்களும், எட்டு ஆயிரம் தேர்ப்படையும், மேலும் ஆறாயிரம் யானைப்படையும் கொன்ற பிரமாண்டம் இருப்பதாலும் மேற்கொண்டு நகர கண்டிப்பாக மறுத்துவிட்டனர்.
ஆகிலும் அலெக்ஸாண்டர் மேற்கொண்டு முன்னேற வீரர்களை தயார் படுத்தலானார். ஆனால் அவரது தளபதி கொயேநூஸ் அலெக்ஸாண்டருடன் வாக்குவாதம் செய்து அவரது எண்ணத்தை மாற்றினார். அந்த தளபதி அலெக்ஸாண்டரிடம்


நமது படை வீரர்கள் தங்களது பெற்றோரையும், மனைவியரையும், குழந்தைகளையும் விட்டு பிரிந்து வந்து பல வருடங்கள் ஆகிறதென்றும், அவர்களுக்கு வாழ்வில் மிச்சமுள்ள நாட்களை அமைதியாக செலவிட அனுமதிக்க வேண்டுமென்றும். அனைவரையும் தாயகம் திரும்ப அனுமதிக்க வேண்டுமென்றும் விவாதித்தார்.


ஒருவழியாக அலெக்ஸாண்டர் தெற்கு நோக்கி திரும்ப சம்மதித்தார். மீண்டும் சிந்து நதி கடந்து வழியில் மல்லி மலைவாழ் (தற்போதைய முல்தான்) மக்களையும் மேலும் சில இந்திய பழங்குடியினரையும் எதிர்கொண்டார்.
அலெக்ஸாண்டர் தனது படையின் பெரும்பகுதியை தனது தளபதி கிராடேராஸ் தலைமையில் கார்மேனியாவிற்கு (தற்போதைய தெற்கு ஈரான்) அனுப்பிவைத்தார். மற்றும் தனது கடற்படை தொகுதியை பாரசீக குடா பகுதிகளுக்கு தனது கடற்ப்படை அதிகாரி நியர்சுஸ் தலைமையில் அனுப்பினர். மீதமுள்ள படையினரை தானே தலைமை ஏற்று தெற்கு நோக்கி கடுமையான கேட்ரோசியன் பாலை நிலம் வழியாக வழிநடத்தி பாரசீகம் சென்றார். வழியில் அவர் கி.மு.324'ல் சூசா-வை அடைந்த பொழுது இதற்க்கு முன்பு எப்பொழுதும் இல்லாத அளவு தனது படையின் பெரும்பகுதியை அந்த பாலை நிலத்தின் கொடுமைக்கு பலியாக இழந்திருந்தார்.


பாரசீகத்தில் அந்திம காலங்களில் அலெக்ஸாண்டர்



அலெக்ஸாண்டர் (இடது) மற்றும் ஹெபெஷன் (வலது)
இவர் இல்லாத காலகட்டங்களில் இவர் ஆட்சி பொறுப்பில் அமர்த்திய பல சர்வாதிகார ஆளுநர்களும் சத்ரப்'களும் எல்லை மீறிய செயல்களில் ஈடுபட்டதை அலெக்ஸாண்டர் கண்டறிந்தார் இதன் காரணமாக அவர்களில் பலரை கொன்றார். மேலும் அவரது வீரர்களுக்கு கடன் வழங்கினார்.
மேலும் இவர் க்ராடேருஸ் தலைமையில் வாலிபம் கடந்த பலவீனமான வீரனாக மாசீடோன்-க்கு திரும்புவதாக அறிவித்தார். இவரது படையினர் அந்த கூற்றை தவறாக புரிந்துகொண்டு ஒபிஸ் நகரில் கழகத்தில் ஈடுபட்டனர். பாரசீகத்தின் இறையாண்மையை மதிக்க தவறினர். மூன்று நாட்களுக்கு பின்னும் அடங்காத கழகத்தினால் வெறுப்புற்ற அலெக்ஸாண்டர் மசீடோனியர்களால் அளிக்கப்பட்ட அலகுகளையே பாரசீகத்தில் பின்பற்றலாம் என்று அறிவித்தார்.
இதன் பின் தவறை உணர்ந்த மாசீடோனியர்கள் மன்னிப்பு கோரினர். அலெக்ஸாண்டரும் மன்னித்தார். அதற்காக அவரளித்த விருந்தில் பல்லாயிரகணக்கனோர் ஒன்றாக உணவருந்தி களித்தனர். பாரசீகத்தினருக்கும் மாசீடோனியர்களுக்கும் இடையில் சமாதானம் உண்டுபண்ணும் முயற்சியாக பாரசீகத்தின் குலத்திலிருந்து ஒருவரை அலெக்ஸாண்டர் மணந்துகொண்டார்.
எக்பட்டானா-விற்கு திரும்பிய பின்பு அலெக்ஸாண்டர் பாரசீகத்தின் கருவூலத்தை மீட்டெடுத்தார். இவரது நெருங்கிய ரகசிய தோழனான ஹெபெஷன் மர்மமான முறையில் இறந்தார். அவர் உடல்நலமின்றி இறந்தாலும் நஞ்சூட்டப்பட்டு கொல்லப்பட்டதாகவும் சான்றுகள் இருந்தமையால் அலெக்ஸாண்டர் மிகவும் மனம் வெதும்பினார். அலெக்ஸாண்டர் ஹெபெஷனின் மரணத்தினால் குலைந்து போனார்.
மேலும் துணைவனும் தோழனுமான ஹெபெஷனின் ஈமசடங்கிற்கு பாபிலோனில் மிக்க பொருட்செலவில் ஏற்பாடுகள் செய்ய கட்டளையிட்டார். இதன் பின்னர் மீண்டும் ஒரு பெரிய அளவிலான போர்த்தொடருக்கு அலெக்ஸாண்டர் திட்டம் தீட்டினார். ஆனால் அவற்றை எல்லாம் ஆரம்பிக்கும் முன்பே அவர் மரணித்தார்.


மரணம்

கி.மு.323-ல் ஜூன் 10 அல்லது 11 ஆம் நாளில் தனது 32 ஆவது வயதில் அலெக்ஸாண்டர் பாபிலோனிலுள்ள இரண்டாம் நெபுகன்ட்நேசர் மாளிகையில் உயிர்நீத்தார். இருப்பினும் இவரது மரண தேதியின் மீது இன்றும் கூட நிறைய விவாதங்கள் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறன.


அலெக்ஸாண்டரின் சொந்த உறவுமுறைகள்

அலெக்ஸாண்டருடைய வாழ்வில் பெரும்பாலான காலங்கள் அவரது தோழனும், ரகசிய துணையும், மெய்க்காப்பாளனும், தளபதியுமான, ஹெபெஷன் உடன் தான் கழிந்தன. ஹெபெஷனின் மரணம் அலெக்ஸாண்டரை தனது அந்திம காலத்திற்கு இட்டுசென்றது. இந்த நிகழ்வே அவரது அந்திம காலங்களில் அவரை உடல்நல குறைவிற்கும், மனநல சிதைவிற்கும் உண்டாக்கியது.
அலெக்ஸாண்டர் இருமுறை திருமணம் செய்து கொண்டார். ரோக்ஷனா (பாக்டரியான் மேன்குடியினரின் மகள்), மற்றும் பாரசீக அரசன் மூன்றாம் டாரியஸின் மகள் இரண்டாம் ஸ்டாடீரா ஆகியோரை மணந்தார். அதே போல அவருக்கு இரு ஆண் குழந்தைகள் இருந்தனர். ரோக்ஷனா மூலமாக நேரடி சட்டபூர்வ வாரிசாக மாசீடோனின் நான்காம் அலெக்ஸாண்டர்-உம், பர்ஷைன் மூலமாக மாசீடோனின் ஹெரகில்ஸ். மேலும் அவர் தனது ஒரு மகவை ரோக்ஷனா பாபிலோனில் இருந்த பொழுது கவனமின்மையால் இழந்தார். அலெக்ஸாண்டரின் பாலீர்ப்பு பற்றி நிறைய கருத்து விவாதங்கள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன. எந்த ஒரு பண்டைய குறிப்பிலும் அலெக்ஸாண்டரை ஓரின சேர்க்கையாளர் என்றோ ஹெபெஷன் உடனான உறவு காமம் கலந்த உறவு என்றோ குறிப்பிடபடவில்லை. அதே சமயம் ஆயிலியன் தனது எழுத்துகளில் அலெக்ஸாண்டரின் ட்ராய் பிரவேசத்தின் பொழு நிகழ்ந்த நிகழ்வினை பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
அலெக்ஸாண்டர் அக்கீலியஸின் சிலைக்கும் ஹெபெஷன் பேட்ரோகுலஸின் சிலைக்கும் மாலை அணிவித்தார்கள்


கி.மு.324-ல் அலெக்ஸாண்டருக்கும் பர்ஷைன்-க்கும் இடையில் நிகழ்ந்த திருமணத்தில் மணமக்கள் இருவரும் மண அலங்காரத்தில் இருப்பதில் விளக்கும் சுவரோவியம், போம்பெய்.
இதை தவிர வேறு எந்த வித கொச்சை குறிப்புகளும் பண்டைய கிரேக்க பண்பாடு பற்றிய குறிப்புகளில் காணப்படவில்லை. ஆனாலும் இந்த வார்த்தைக்கு காமம் கலந்த அர்த்தம் மட்டுமே கொள்ளப்படும் என்கிற கட்டாயமும் இல்லை. ஒருவேளை அலெக்ஸாண்டர் இருபாலீர்ப்பும் கொண்டிருக்க வாய்ப்புண்டு. அது அவரது காலகட்டங்களில் கிரேக்க கலாசாரத்தில் தவறானதுமில்லை
மேலும் அவர் தனது அந்திமகாலம் நெருங்கும் தருவாய் வரைக்கும் தனக்கென்று ஒரு வாரிசை உருவாக்கவில்லை. மேலும் அலெக்ஸாண்டரின் பெண்தேடும் படலம் அவரது தந்தையாரின் பெண் தேடலை விட மிக பிரமாண்டமானது என்று ஆக்டேன் கருத்துகளை முன்வைக்கிறார். மனைவியரை தவிர அலெக்ஸாண்டருக்கு நிறைய பெண் தொடர்புகள் உண்டு. மேலும் அலெக்ஸாண்டர் தனக்கென பாரசீக மன்னர்களின் வழக்கத்தின் படி அந்தப்புரங்கள் அமைத்து அதில் எண்ணற்ற பெண்களை நிறைத்திருந்தார். ஆனால் அவர்களிடத்தில் வெகு அரிதாக தான் பொழுதினை கழித்தார். அலெக்ஸாண்டர் இந்த சிற்றின்ப விஷயத்தில் மிகுந்த தன்னடக்கத்துடன் வாழ்ந்தார். இருந்த போதிலும் ப்ளுடர்ச் அலெக்ஸாண்டர் ரோக்ஷனாவிடம் மதிமயங்கியதாக குறிப்பிடுகிறார். அவளிடத்தில் மட்டும் காதலை கொடுத்ததாகவும் குடிப்பிடுகிறார். கிரீனும் இதையே வழிமொழிகிறார், அலெக்ஸாண்டர் தன்னை தத்தெடுத்த காரியாவின் அடா மற்றும் அலெக்ஸாண்டரின் மரணசெய்தி கேட்டதும் துக்கத்தில் உயிர்நீத்த டாரியஸின் தாயார் சிஸிகம்பிஸ் முதற்கொண்டு பல பெண்களுடன் நட்பு கொண்டிருந்தார் என்று குறிப்பிடுகிறார்.

2012/06/08

வேற்றுக்கிரக வாசிகளின் கோவில் 


இந்தியாவில் கடந்த காலங்களில் பத்தாயிரம் வருடங்கள் வரை வேற்றுக் கிரகவாசிகள் வாழ்ந்து இருக்கின்றனர் என்பதற்கு எத்தனையோ உறுதியான ஆதாரங்கள் உள்ளன.

இந்த வகையில் வேற்றுக் கிரகவாசிகளால் கட்டப்பட்ட கோவில் மேற்கு இந்தியாவில் உள்ள அஜந்தா என்கிற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.






சோசலிசப் புரட்சியாளர் சேகுவேரா




அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்....

பெயர்

சே என்பது வியப்புச்சொல் ஆகும். இச்சொல்லை அர்சென்டீனர்கள், குவேரனி இந்தியர்களிடமிருந்து பழகினர் என்பர். அவ்விந்தியர், எனது என்ற பொருளில் பயன்படுத்துவர் என்று மானுடவியல் அறிஞர் கூறுவர்.ஆனால், தென்னமரிக்கப் பாம்பாஸ் புல்வெளியினருக்கு, ஆச்சரியம், ஆனந்தம், வருத்தம், நாணயம், அட்சேபம், அங்கீகாரம் போன்ற பல மானுட உணர்வுகளை வெளிப்படுத்தும் சொல்லாக அமைகிறது. இடத்திற்கு ஏற்பவும், ஒலிப்புக்கு ஏற்றவாறும் அச்சொல் பயனாகிறது. இச்சொல்லின் மீதுள்ள பற்றால், கியூபா புரட்சியாளர்கள், 'சே' என்று செல்லமாக அழைத்தனர். அவரது பெற்றோர், அவரை 'டேட்டி' என்று செல்லமாக அழைப்பர்.

கியூபாவில் புரட்சி

சில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். அக்காலகட்டத்தில் கரந்தடிப் போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.

பொலிவியாவில் சே குவேரா

பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் ஒக்டோபர் 9, 1967 இல் சே குவேரா கொல்லப்பட்டார். சாட்சிகள் மற்றும் கொலையில் பங்குபற்றியவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது.கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்றார்.தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி பட்டிருந்தது)
அவரது மரணத்தின்பின், சே குவேரா உலகிலுள்ள சோசலிச புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராக கொண்டாடப்படுகிறார். சே 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார். பல காரணங்களால் பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று நம்பப்படுகிறது. அமெரிக்கா பொலிவியாவைவிட கரிப்பியன் பேசின் நாடுகளே தங்கள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என்று நம்பியதும், அதனால் அமெரிக்காவின் பார்வை பொலிவியா மீது அவ்வளவு தீர்க்கமாக விழவில்லை என்பதும் ஒரு காரணம் . இரண்டாவதாக பொலிவியாவின் ஏழ்மையும் அங்கு நிலவிய சமூக மற்றும் பொருளாதார நிலைகளும் எந்நேரமும் அங்கு புரட்சி வெடிக்க சாதகமாக இருந்தது . மூன்றாவதாக பொலிவியா ஐந்து பிற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொண்டிருந்தது . பொலிவியாவில் கொரில்லாப் போராட்டம் வெற்றி பெறுமேயானால் அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவச் செய்துவிடலாம் என்று குவேரா நினைத்தது. (ஆனால் ஃபிடெல் காஸ்ட்ரோ தன்னை வஞ்சித்து விட்டதாக சே குவேரா மிகவும் வருந்தியதாக 1998ம் ஆண்டு ஓய்வு பெற்ற பொலிவிய ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நினோ டி குஸ்மான் என்ற அந்த அதிகாரி குவேராவை சுட்டுக் கொல்வதற்கு முன்பு அவனிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது சே அவனுடைய மனக்குமுறலை வெளியிட்டதாகவும் கூறினார். தான் பெரு நாட்டில் புரட்சி செய்ய முடிவெடுத்ததாகவும் ஆனால் காஸ்ட்ரோ தான் தன்னை வற்புறுத்தி பொலிவிய நாட்டில் கலகம் விளைவிக்கக் கூறியதாகவும் சே குவேரா கூறியதாக தகவல் வெளியாயிற்று !!!! மேலும் சே குவேரா பெரு நாட்டின் விவசாயிகள் தன்னுடைய புரட்சிக்கு ஆதரவு கொடுத்திருப்பார்கள் என்றும் பொலிவிய நாட்டில் விவசாய மறுமலர்ச்சி திட்டத்தால் மக்கள் அவ்வளவு அதிருப்தியடையாததால் அவர்களின் ஆதரவு எதிர்ப்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறியதாக அந்த அதிகாரி கூறியிருந்தார்.)
[தொகு]இளமைக்காலம்

சே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் அர்ஜென்டீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். ஸ்பானிய, பாஸ்க்கு, ஐரிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.
வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த "ரக்பி" விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை "பூசெர்" என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு "பன்றி" என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.
தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12 ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வளர்ந்த பின்பும், பின்னர் வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நெரூடா, கீட்ஸ், மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்கள் மீது இவருக்குச் சிறப்பு ஆர்வம் இருந்தது.
குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம். இவற்றுள், மார்க்ஸ், போல்க்னர், கைடே, சல்காரி, வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேரு, காப்கா, காமுஸ், லெனின் போன்றவர்களது நூல்களையும், பிரான்ஸ், ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார்.
அவரது வயது அதிகரித்த போது, அவருக்கு இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான குயிரோகா, அலெக்ரியா, இக்காசா, டாரியோ, ஆஸ்டூரியாஸ் போன்றோருடைய ஆக்கங்களின் பால் ஈடுபாடு ஏற்பட்டது. செல்வாக்கு மிக்க தனி நபர்களின் கருத்துருக்கள், வரைவிலக்கணங்கள், மெய்யியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதிவந்த குறிப்புப் புத்தகத்தில் இவர்களுடைய கருத்துக்களையும் அவர் குறித்து வந்தார். இவற்றுள், புத்தர், அரிஸ்ட்டாட்டில் என்போர் பற்றிய ஆய்வுக் குறிப்புக்கள், பேட்ரண்ட் ரஸ்ஸலின் அன்பு, தேசபக்தி என்பன குறித்த ஆய்வு, ஜாக் லண்டனின் சமூகம் பற்றிய கருத்துக்கள், நீட்சேயின் இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பனவும் அடங்கியிருந்தன. சிக்மண்ட் பிராய்டின் ஆக்கங்களாலும் கவரப்பட்ட சே குவேரா, அவரைப் பல வேளைகளில் மேற்கோள் காட்டியுள்ளார்.
1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி "மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்" (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.



சின்சினா



இல்டா காடியா



அலெய்டா மர்ச்சு



பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார். பயணத்தின் முடிவில், இவர், இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. ஆர்ஜெண்டீனாவுக்குத் திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமாப் பட்டம் பெற்றார்.
1953 ஜூலையில் மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலீவியா, பெரு, ஈக்குவடோர், பனாமா, கொஸ்தாரிக்கா, நிக்கராகுவா, ஹொண்டூராஸ், எல் சல்வடோர் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ் குஸ்மான் என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட (latifundia) முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார். உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார்.
குவாத்தாமாலா நகரில், சே குவேராவுக்கு ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு (American Popular Revolutionary Alliance) என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களுமான தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன. இக் காலத்திலேயே "சே" என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. "சே" என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்...

source:
http://tamilebooksdownloads.blogspot.com/2009/05/blog-post.html

2012/06/07



32,000 ஆண்டு பழமை வாய்ந்த தமிழர் வரலாறு